தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது எளிதாகிவிட்டது. இதுவரை ஆறு வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்திருந்தாலும், டி20 போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது முயலாத காரியமாக இருக்கிறது.
2018இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், 76 பந்துகளில் 172 ரன்களை விளாசினார். இதுவே சர்வதேச டி20 போட்டிகளில் தனிநபர் அடித்த அதிக ஸ்கோராகும். அதேபோல 2013 ஐபிஎல் போட்டியில் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கெயில் 66 பந்துகளில் 175 ரன்கள் அடித்ததே டி20 போட்டிகளில் தனிநபர் அடித்த அதிக ஸ்கோராக இருக்கிறது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் டி20 போட்டிகளில் யார் முதலில் இரட்டை சதம் அடிப்பார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.