இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றிருந்த நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது, கடைசி ஒருநாள் போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
தொடரை வென்ற இந்தியா:
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 131, லபுசானே 54 ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 286 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி நிலையான தொடக்கத்தை அளித்தது. பின்னர் கே.எல். ராகுல் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா - கேப்டன் கோலி ஆகியோர் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் 119 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கோலியும் தன் பங்கிற்கு 89 ரன்கள் விளாசி அவுட்டானார். இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இப்போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ரோஹித் சர்மா, ஒருநாள் தனது 29ஆவது சதத்தை நிறைவுசெய்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் பல்வேறு சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார். அதன்படி ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசிய வீரர், மிகக் குறைந்த இன்னிங்சில் 29 சதங்களை விளாசிய வீரர், ஆஸிக்கு எதிராக அதிக சதம் விளாசிய இந்தியர் உள்ளிட்ட சாதனைப் பட்டியலில் ரோஹித் இடம்பிடித்துள்ளார்.
ரோஹித் படைத்த சாதனைகள்
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளி ரோஹித் சர்மா நான்காம் இடம்பிடித்துள்ளர்.