ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனை முன்னிட்டு தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்களது அணியை பலப்படுத்தும் வேலையில் தீவிரம் காட்டிவருகின்றனர். அந்தவகையில், ஐபிஎல் முதல் சீசனின் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ராப் கெசல் நியமிக்கப்பட்டுள்ளார்.
36 வயதான இவர், தெற்கு ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்துள்ளார். அதன்பின் அயர்லாந்து அணியின் துணை பயிற்சியாளராகவும், பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பொறுப்பு வகித்து அந்த அணியை பலப்படுத்தினார். வேகப்பந்துவீச்சாளர்களுக்கென்று பிரத்யேக 'விக்கெட்ஸ்அப்' சென்ற செயலியை உருவாக்கி கேன் ரிச்சர்ட்சன் போன்ற பல்வேறு பந்துவீச்சாளர்களை உருவாக்கியுள்ளார்.