தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 23, 2019, 1:00 PM IST

ETV Bharat / sports

சதங்களால் கிடைத்த பாகிஸ்தானின் வரலாற்று வெற்றி!

கராச்சி: பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 263 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது.

Pak Vs SL match result
Pak Vs SL match result

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி, மழைக்காரணமாக டிராவில் முடிவடைந்தது. அதனையடுத்து கடந்த 19ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஆசம், அசாத் ஆகியோர் அரைசதம் அடித்ததன் மூலம், முதல் இன்னிங்ஸில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அசாத் ஷஃபிக் 63 ரன்களை எடுத்தார். இலங்கை அணி தரப்பில் குமாரா, லசித் எம்புல்டேனியா தலா நாங்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பின் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி சீரான இடைவெளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறா, சண்டிமலின் சிறப்பான அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 271 ரன்களை சேர்த்தது. இதில் தினேஷ் சண்டிமல் 74 ரன்களை விளாசினார். பாகிஸ்தான் அணி சார்பில் ஷயீன் அஃப்ரிடி ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி காட்டிய பாகிஸ்தான் அணிக்கு டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சதங்களை விளாசி, இலங்கை அணியின் பந்துவீச்சை சுக்குநூறாக்கினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 555 ரன்களைக் குவித்தது.

இதில் பாகிஸ்தான் அணி சார்பாக ஷான் மசூத் 135 ரன்களும், அபித் அலி 175 ரன்களும், கேப்டன் அஷார் அலி 118 ரன்களிலும், பாபர் ஆசம் 100 ரன்களையும் அடித்து அசத்தினர். அதன்பின் 475 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஓஷாடா ஃபெர்னாண்டோ சிறப்பாக விளையாடி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

ஆனால் அவரைத் தவிர மற்ற வீரர்கள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 13 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியை வென்று வரலாற்று சாதனைப் படைத்தது.

மேலும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியது. மேலும் பாகிஸ்தான் அணி நஷீம் ஷா, ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் அரங்கில் இளம் வயதில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் நபர் என்ற சாதனையையும் படைத்தார். இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய அபித் அலி ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:இந்திய கிரிக்கெட்டின் தன்னிகரில்லா தலைவன் கிடைத்து 15 ஆண்டுகள் நிறைவு #15YearsOfDhonism

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details