தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 26, 2020, 2:53 PM IST

ETV Bharat / sports

ஒருநாள் போட்டியில் முற்சதம் விளாசிய முதல் ஜோடி! #Onthisday

21 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் இலங்கை அணிக்கெதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் இருவரும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் முறையில் 318 ரன்களை எடுத்து சாதனை படைத்தனர்.

On this day in 1999: Ganguly, Dravid formed 318-run stand against Sri Lanka
On this day in 1999: Ganguly, Dravid formed 318-run stand against Sri Lanka

இந்திய கிரிக்கெட் அணியில் மிகச்சிறந்த வீரர்களாக வலம் வந்தவர்களும் முன்னாள் கேப்டன்களுமான சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட். இதில் ஒருவர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ‘தாதா’வாக வலம்வந்தாலும், மற்றோருவரோ தடுப்பாட்டத்தில் பந்துவீச்சளர்களை புரட்டியெடுக்கும் ‘தடுப்பு சுவராக’ வலம்வந்தவர்.

சவுரவ் கங்குலி - ராகுல் டிராவிட்

ஆனால், இருவரும் இணைந்து விளையாடிய ஒரு போட்டி சரித்திரத்தை புரட்டி போட்டது என்றால் அது மிகையாகாது. அப்படியொரு போட்டியின் காரணமாக தான் இந்த இருபெரும் சரித்திர வீரர்கள் இந்திய கிரிக்கெட்டை வேறோரு பரிணாமத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த போட்டியானது 1999ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அரங்கேறியதும் மற்றோரு சாதனையாகும். அத்தொடரின் 21ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின.

கங்குலி - டிராவிட்

அப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி இரட்டை சிகரங்களின் அசுர ஆட்டத்தை எதிர்பார்திராமல் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சடகோபன் ரமேஷ், சவுரவ் கங்குலி இணை தொடக்கத்தில் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அதில் ரமேஷ் ஐந்து ரன்களை எடுத்திருந்த போது, சமிந்தா வாஸிடன் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

பந்தை சிக்சருக்கு விளாசும் கங்குலி

இதையடுத்து, ஜோடி சேர்ந்த ராகுல் டிராவிட் - கங்குலி இணை இலங்கை அணியின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பறக்க விட்டனர். ஒரு கட்டத்தில் இந்த ஜோடிக்கு எப்படி பந்துவீசுவது என்று தெரியாமல், ‘இவனுங்க எப்படி போட்டாலும் அடிக்குறானுங்க’ என்ற வசனத்திற்கேற்ப பந்துவீச்சாளர்களை தெறிக்கவிட்டனர். தொடர்ந்து அதிரடியில் மிரட்டி வந்த கங்குலி தனது ஏழாவது ஒருநாள் சதத்தையும், டிராவிட் தனது ஐந்தாவது ஒருநாள் சாதத்தையும் பதிவு செய்து அசத்தினர்.

இதனால் ஐம்பது ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 373 ரன்களை குவித்திருந்தது. இதில் சவுரவ் கங்குலி 158 பந்துகளில் ஏழு சிக்சர்களையும், 17 பவுண்டரிகளையும் பறக்க வீட்டு 183 ரன்களை விளாசித்தள்ளினார். மறுமுனையில் ராகுல் டிராவிட்டும் தனது பங்கிற்கு 129 பந்துகளில் 145 ரன்களை வெளுத்து தள்ளினார்.

பவுண்டரி விளாசும் டிராவிட்

இதில் இரண்டாம் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக மட்டும் 318 ரன்களை கங்குலி - டிராவிட் இணை எடுத்திருந்தது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பார்ட்னர்ஷிப் முறையில் 300 ரன்களை கடந்த முதல் ஜோடி என்ற வரலாற்று சாதனையையும் படைத்தனர்.

இதைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணியோ, 42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்களை மட்டுமே பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சதமடித்த மகிழ்ச்சியில் டிராவிட்

அதன் பிறகு, இச்சாதனையை இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் - ராகுல் டிராவிட் இணை 331 ரன்களை எடுத்து அதே ஆண்டு நவம்பர் மாதம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கங்குலி அப்போட்டியில் விளாசிய 183 ரன்களே, இதுநாள் வரை அவரின் மிகச் சிறந்த ஸ்கோராக உள்ளது. அதேபோல் ராகுல் டிராவிட் விளாசிய 145 ரன்கள் அவரது இரண்டவாது அதிகபட்சமாக விளங்குகிறது.

ஒரு நாள் போட்டியில் பார்ட்னர்ஷிப் முறையில் அதிக ரன்கள் அடித்த ஜோடி:

  • கிறிஸ் கெயில், மார்லன் சாமுவேல்ஸ் - 372 ரன்கள் - 2015, பிப்ரவரி 24
  • ஜான் கேம்பெல், ஷாய் ஹோப் - 365 ரன்கள் - 2019, மே 5
  • சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் - 331 ரன்கள் - 1999, நவம்பர் 8
  • சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் - 318 ரன்கள் - 1999, மே 26

இதையும் படிங்க:சச்சினை 8 வயதில் சந்தித்தேன்... நினைவு பகிரும் ப்ரித்வி ஷா...!

ABOUT THE AUTHOR

...view details