கராச்சியில் இன்று தொடங்கிய பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் தனுஷ்கா குனத்திலகா அதிரடியாக விளையாடி சதமடித்தார்.
இதன்மூலம் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 297 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குனத்திலகா 133 ரன்களை விளாசினார்.
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஃபக்கர் சமான், அபித் அலி ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதமடித்து அசத்தினர்.
பின்னர் அபித் அலி 74 ரன்களிலும், ஃபக்கர் சமான் 76 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாபர் ஆசம், ஹரிஸ் சோஹைல் ஆகிய இருவருமே அதிரடி ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.