இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், நாளை இந்தப் போட்டி தொடங்குகிறது.
தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இப்போட்டி நடைபெற்றாலும் அவர் இந்திய அணியில் களமிறங்கப் போவதில்லை. ஏனெனில் அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டே ஓய்வு பெற்றுவிட்டார். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடருக்குப்பின் ராணுவப் பயிற்சி, சிறிய இடைவேளை போன்ற காரணங்களால் ஒருநாள், டி20 போட்டிகளில் தோனியை காண முடியாமல் அவரது ரசிகர்கள் தவித்துவருகின்றனர்.