தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இரு கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமருந்து பரிசோதனை.. - குனல் சண்டிலா

டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்றுவரும் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் இரண்டு கிரிக்கெட் வீரர்களின் சிறுநீர் மாதிரிகளை தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு பரிசோதனைக்காக சேகரித்துள்ளது.

NADA collects sample of two cricketers in Ranji Game
NADA collects sample of two cricketers in Ranji Game

By

Published : Dec 26, 2019, 6:23 PM IST

Updated : Dec 26, 2019, 7:51 PM IST

தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் (National Anti Doping Agency) கண்காணிப்பின் கீழ் பிசிசிஐ கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு உள்ளூர் கிரிக்கெட் தொடரில் வீரர்கள் பலரும் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான ரஞ்சி போட்டி டெல்லியில் நடைபெற்றுவருகிறது.இதில், ஊக்கமருந்து பரிசோதனைக்காக டெல்லி அணியின் தொடக்க வீரர் குனல் சண்டிலா, ஹைதராபாத் அணியின் கேப்டன் தன்மயி அகர்வால் ஆகியோரது சிறுநீர் மாதிரிகளை தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு சேகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த மாதிரிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள உலக ஊக்க மருந்து தடுப்பு மையத்தில் சோதிக்கப்படவுள்ளது.

குறிப்பிட்ட நபரின்றி ஒவ்வொரு அணியிலிருந்தும் தலா ஒரு வீரரின் சிறுநீர் மாதிரிகளை சேகரிக்க தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பினர் வந்தனர் என டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஊக்கமருந்தால் பறிபோன இந்திய தடகள வீராங்கனையின் 2 தங்கம்

Last Updated : Dec 26, 2019, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details