காலம்காலமாக கிரிக்கெட் போட்டிகளில், பந்தை உபயோகிக்க ஏதுவாக அதன் மீது உமிழ்நீர் பயன்படுத்துவது வழக்கம். அப்படி செய்வதால் பந்து நன்கு ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். இந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதற்கு பல்வேறு வீரர்களும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் கூறுகையில், "குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பிறகு பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். அப்படி தடை நீக்கப்படவில்லை என்றால் கிரிக்கெட் போட்டிகளில் சுவாரஸ்யம் குறைந்து சலிப்பாகவே இருக்கும்.