தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'வரும் முன் காப்போம்' - கொரோனா குறித்து கோலி ட்வீட்!

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி ட்வீட் செய்துள்ளார்.

By

Published : Mar 14, 2020, 4:35 PM IST

Let's stay strong and fight coronavirus outbreak: Kohli
Let's stay strong and fight coronavirus outbreak: Kohli

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் மட்டும் இதுவரை 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், மக்களிடையே விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி ட்வீட் செய்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ”வரும் முன் காப்போம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு நாம் அனைவரும் சுகாதாரத்துடன் இருந்து இந்த வைரஸை எதிர்த்து போராடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா வைரஸால் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், பேட்மிண்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரும் ரத்து செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க:கொரோனா எதிரொலி: ஐந்து பேட்மிண்டன் தொடர்கள் ரத்து

ABOUT THE AUTHOR

...view details