2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து ஐந்து நாள்களாக நடைபெறும் டெஸ்ட் போட்டியை நான்கு நாள்களாக நடத்துவது குறித்து ஐசிசி சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. இந்த யோசனைக்கு முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சமீபத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான், ஐசிசியின் யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''நான் பலநாள்களாக நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் பற்றி பேசிவருகிறேன். நான்கு நாள்கள் ஆடப்படும் டெஸ்ட் போட்டிகள் நிச்சயம் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் பரிசோதனை செய்து பார்க்கலாம்.