டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதற்கு கடைசி ஓவரை ஜடேஜாவை பந்துவீச வைத்தது தான் காரணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டனர். இதற்கு ஆட்டம் முடிந்து விளக்கமளித்த தோனி, ''காயமடைந்து ஓய்வறைக்கு சென்ற பிராவோ மீண்டும் களத்திற்கு திரும்பவில்லை. அதனால் ஜடேஜா மற்றும் கரண் ஷர்மா ஆகியோரில் ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. நான் ஜடேஜாவை தேர்ந்தெடுத்தேன். தவானின் விக்கெட் மிக முக்கியம் என்பது தெரியும். அவர் கொடுத்த கேட்ச்சை பலமுறை நாங்கள் தவறவிட்டோம்.
அவரை தொடர்ந்து பேட்டிங் செய்ய அனுமதித்தால், அவரால் என்ன செய்ய முடியும் என்பது தெரியும். ஆனால் தவானை தவிர்த்து எங்களின் தோல்விக்கு வேறு எந்த காரணமும் கூறிவிட முடியாது.