பரபரப்புக்கு பெயர் போன இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருநாட்டு கிரிக்கெட் தொடர், சமீப ஆண்டுகளாக பல்வேறு அரசியல் காரணங்களால் நடைபெறாமல் உள்ளது. இதனால், ஐசிசி, ஆசிய கோப்பை உள்ளிட்ட தொடர்களில் மட்டுமே இவ்விரு அணிகள் பலப்பரீட்சை நடத்திவருவதால், அரசியல் காரணங்களை விடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, அந்த கோரிக்கையை நீண்ட நாட்களாக முன்வைத்துவந்துவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான அப்ரிடி. அவர், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஆஷஸ் தொடரைவிடவும் சிறப்பு வாய்ந்த தொடர் எனவும் இருநாடுகளுக்கு இடையிலான தொடர் நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்தியா பங்கேற்காது என கூறப்பட்டது. இதனால், இந்தத் தொடரில் இந்திய அணியின் போட்டிகளை பாகிஸ்தானிற்கு பதிலாக வேறு பொதுவான மைதானத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு எடுக்கும்.
ஒருவேளை இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகள் சந்திக்க நேரிட்டால் அந்தப் போட்டியை எங்கு நடத்தலாம் என்பது குறித்தும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில்தான் முடிவு எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முதன்மை நிர்வாகி வசிம் கான் கூறினார்.
இந்நிலையில், மோடி ஆட்சியில் இருக்கும்வரை இந்தியா - பாகிஸ்தான் உறவில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது என அப்ரிடி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,