நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நான்கு போட்டிகள் நடந்துள்ள நிலையில், இந்திய அணி 4-0 என்ற வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இன்று ஐந்தாவது டி20 போட்டி இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வுசெய்துள்ளார்.
இந்திய அணியில் கடந்த போட்டியைப் போலவே சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இவருக்குப் பதிலாக ரோஹித் கேப்டன்சியை மேற்கொள்கிறார். ரோஹித் சர்மா மூன்றாவது வீரராகக் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை வில்லியம்சன் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனால் டிம் சவுதியே கேப்டனாகத் தொடர்கிறார்.