தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 29, 2020, 11:48 AM IST

ETV Bharat / sports

தோனியின் டீம் மீட்டிங் இரண்டு நிமிடங்கள்தான்...!

மும்பை: 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் பற்றி சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் பகிர்ந்துள்ளார்.

in-the-2008-ipl-final-the-chennai-super-kings-team-meeting-led-by-ms-dhoni-lasted-2-mins
in-the-2008-ipl-final-the-chennai-super-kings-team-meeting-led-by-ms-dhoni-lasted-2-mins

2008ஆம் ஆண்டு முதல்முதலாக ஐபிஎல் தொடர் தொடங்கியபோது சென்னை அணிக்காக பார்த்திவ் படேல் விளையாடினார். அப்போது நடந்த சம்பவங்கள், இறுதிப் போட்டி அனுபவம், தோனி பற்றிய நினைவுகள் என பல்வேறு விஷயங்கள் பற்றி பார்த்திவ் படேல் பேசியுள்ளார்.

அதில், ''சிஎஸ்கே அணியின் டீம் மீட்டிங் இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருந்ததில்லை. 2008ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியின்போது இரண்டு நிமிடங்கள் மட்டுமே டீம் மீட்டிங் இருந்தது. 2019ஆம் ஆண்டு இறுதிப் போட்டியிலும் சென்னை அணியின் டீம் மீட்டிங் இரண்டு நிமிடங்கள்தான் இருந்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. தோனிக்கு எப்போதும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். ஒவ்வொரு வீரரின் பங்கு குறித்து அவர்களே தெரிந்துகொள்ளும் வகையில் தோனி செயல்படுவார். அதனால்தான் சென்னை அணி ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக வலம்வருகிறது.

சென்னை அணி

2008ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. ஏனென்றால் அந்த அணி தனிநபர் சாகசங்களால் இறுதிப்போட்டிக்கு வரவில்லை. அந்தப் போட்டியின்போது பெரிய போட்டிகளுக்கு வீரர்கள் எப்படி தயாராகிறார்கள் என்பதை ஸ்டீபன் ப்ளெமிங், மைக் ஹசி, ஹெய்டன் ஆகியோரைப் பார்த்து கற்றுக்கொண்டேன்.

பார்த்தீவ் படேல்

ஐபிஎல் தொடர், தொடக்கத்தில் இருந்ததுபோல் இப்போது இல்லை. அப்போது கடைசி ஐந்து ஓவர்களில் 35 முதல் 40 ரன்கள் அடித்தால் போதும். ஆனால் இப்போது 50 முதல் 60 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது'' என்றார்.

இதையும் படிங்க:ஸ்பெயினில் இனி ஒவ்வொரு நாளும் லா லிகா போட்டிகள்தான்!

ABOUT THE AUTHOR

...view details