இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின் எந்த சர்வதேச போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனிடையே பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடர் செப். மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரோடு தோனி விரைவில் ஓய்வை அறிவிப்பார் என ரசிகர்களிடையே கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிக்கெட் பற்றி அனைத்து கேள்விகளுக்கும் கடுமையான விமர்சனங்களை வைக்கும் கம்பீர் தோனி பற்றி பேசியுள்ளார்.
அதில், ''வயது என்பது வெறும் நம்பர் தான். நல்ல ஃபார்மில் இருந்து, பந்துகளை நன்றாக ஹிட் செய்தால் போதும். கிரிக்கெட்டை ரசித்து ஆட வேண்டும். அப்படி அவர் ரசித்து ஆடினால் இந்தியாவுக்காக கிரிக்கெட் போட்டிகளை வென்று கொடுக்க முடியும் என்று நினைத்தால் அவர் நிச்சயம் ஆடலாம். அதுவும் 6 மற்றும் 7ஆவது இடங்களில் களமிறங்கி இந்திய அணிக்காக செய்தால், அவர் நிச்சயம் ஆட வேண்டும்.