தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நான் தோல்வியடைந்தால் உங்கள் முன் மீண்டும் வரமாட்டேன்: சச்சின் டெண்டுலகர்! - கிரிக்கெட் கடவுள்

மும்பை: ஆரம்ப காலங்களில் நான் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக ஆடுவதற்காக கெஞ்சியுள்ளேன் என கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

சச்சின்

By

Published : Sep 25, 2019, 11:42 PM IST

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு வீடியோவில் தனது தொடக்க கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அந்த வீடியோவில், ’என்னுடைய தொடக்க காலத்தில் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக ஆட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அணி நிர்வாகம் எனக்கு அந்த வாய்ப்பளிக்கவில்லை. தொடக்க வீரராக களமிறங்குவதற்கு பல முறை கெஞ்சியுள்ளேன்.

அப்போது தொடக்க வீரராக களமிறங்குபவர்கள் அனைவரும் விக்கெட்டுகளை காப்பாற்றுவதிலேயே கவனம் செலுத்துவர். ஆனால் எனக்கோ பந்துவீச்சாளர்களை எதிர்த்து அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும் எனத் தோன்றும். ஆனால் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அந்த வாய்ப்புக்காக பலமுறை கெஞ்சி, தொடக்க வீரராக நான் சோபிக்கவில்லை என்றால் மீண்டும் உங்கள் முன் வந்து வாய்ப்புக்காக வரமாட்டேன் எனத் தெரிவித்த பின்தான் எனக்கு தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். ஆனால் அந்த வாய்ப்பில் நான் தோல்வியடைந்திருந்தாலும் மீண்டும் வாய்ப்புக்காக நின்றிருப்பேன். ஏனென்றால் தோல்வியை நினைத்து ஒருநாளும் கவலை கொண்டதில்லை. நீங்களும் பயப்படாதீர்கள்’ எனப் பேசியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடக்க வீரராக முதன்முறையாக களமிறங்கிய போது, 49 பந்துகளுக்கு 82 ரன்களை எடுத்து அசத்தினார். அந்த இன்னிங்ஸ் தொடக்க வீரர்களுக்கு புதிய இலக்கணத்தை எழுதிக் கொடுத்தது என்றே சொல்லலாம். அதையடுத்துதான் அதிரடியான வீரர்களை மற்ற அணிகளும் தொடக்க வீரர்களாக களமிறக்கின.

இதையும் படிக்கலாமே: ஐபிஎல் போட்டியில் தோனி கேப்டனாக செயல்படுவாரா? ஸ்ரீனிவாசன் பதில்

ABOUT THE AUTHOR

...view details