இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 14ஆம் தேதி பிசிசிஐயின் நிர்வாகிகள் பதவிக்கான வேட்பு மனுக்களை பெறுவதாக அறிவித்தது. இதில் பிசிசிஐயின் தலைவர் பதவிக்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதன் காரணமாக சவுரவ் கங்குலி பிசிசிஐயின் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பிசிசிஐயைக் கண்காணிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பிசிசிஐயின் 39ஆவது தலைவராக பதவியேற்றார்.