கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்காட்லாந்து அணியின் முன்னாள் வீரர் மஜித் ஹக் தனக்கு கோவிட்-19 பெருந்தொற்று இருப்பதை உறுதிசெய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பாக்கத்தில், “கோவிட்-19 பெருந்தொற்று பரிசோதனையில் தனக்கு பெருந்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராயல் அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் தன்னை சரியாகக் கவனித்துக் கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும் நன்றிகள். உங்களது அதரவால் நான் விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன். இன்ஷா அல்லா உன்னுடைய தயவால் கருஞ்சிறுத்தை விரைவில் குணமடைந்து திரும்புவேன்” என்று பதிவிட்டுள்ளார்.