தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

20 விழுக்காடு பணியாளர்களை நீக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்...! - Economy Problem for ECB

கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சரிசெய்ய 20 விழுக்காடு பணியாளர்களை நீக்கவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

england-cricket-board-to-cut-62-jobs-says-ceo-harrison
england-cricket-board-to-cut-62-jobs-says-ceo-harrison

By

Published : Sep 15, 2020, 10:37 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. பல மாதங்களுக்கு பிறகு விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய நிலையில், காலி மைதானங்களில் தான் போட்டிகள் நடத்தப்பட்டன.

கிரிக்கெட் போட்டிகளுக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. இதனால் பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பொருளாதார பிரச்னையை எதிர்கொண்டது. இதனை சரிசெய்ய சில கிரிக்கெட் வாரியங்கள், வீரர்களின் ஊதியத்தைக் குறைத்தன.

இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் (சிஇஓ) டாம் ஹாரிசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''கடந்த சில வாரங்களாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் லட்சியங்களை சமரசம் செய்யாமல், செலவுகளை குறைப்பதற்கான வழிகளையும், கட்டமைப்புகளையும் ஆய்வு செய்தோம். அந்த ஆய்வினைத் தொடர்ந்து சில ஆலோசனைகளை மேற்கொண்டோம். அதன்மூலம் சில நடவடிக்கைகள் மேற்கொண்டால், செலவுகளை குறைக்க முடியும்.

டாம் ஹாரிசன்

ஆனால் அந்த நடவடிக்கையின் மூலம் வாரியத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்பு ஏற்படும். அந்த பாதிப்புகளை தடுக்க ஆட்குறைப்பு நடவடிக்கை அவசியமாகிறது.

இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் 20 விழுக்காடு பணியாளர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 20 விழுக்காடு பணியாளர்கள் என்றால், 62 பேர் கணக்கில் வருகிறார்கள். அதேபோல் ஒரே பணியை மேற்கொள்ள பதவிகளில் இருப்போர், இனி பல வேலைகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முடிவால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் உதவிகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: பலமும் பலவீனமும்... மும்பை இந்தியன்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details