தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 15, 2020, 5:15 PM IST

ETV Bharat / sports

உள்நாட்டு தொடர்களில் பங்கேற்க பிசிபி-யிடம் அனுமதி கோரும் கனேரியா!

சூதாட்ட புகாரில் சிக்கியதால் தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, தனக்கு உள்நாட்டு தொடர்களில் பங்கேற்க அனுமதியளிக்கும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வரியத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

danish-kaneria-seeks-permission-from-pcb-to-play-domestic-cricket
danish-kaneria-seeks-permission-from-pcb-to-play-domestic-cricket

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா. இவர் பாகிஸ்தான் அணிக்காக இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 261 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார். இதற்கிடையில், டேனிஷ் இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் எசெக்ஸ் அணியில் விளையாடினார். அச்சமயத்தில் டேனிஷ், ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக பிசிபி அவருக்கு வாழ்நாள் தடையை விதித்தது.

இந்நிலையில் கனேரியா, தன்னை உள்ளநட்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க அனுமதி வழங்கும்படி பிசிபி மற்றும் ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏ.சி.யு) ஆகியவற்றிற்கு தனது ட்விட்டர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

கனேரியாவின் ட்வீட்டர் கடிதத்தில், "உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதற்கும், பங்கேற்பதற்கும் அல்லது அதனுடன் தொடர்புடைய எந்தவொரு செயலுக்கும் அனுமதி வழங்குமாறு ஏ.சி.யு வின் தலைவருக்கு கடிதம் எழுத பி.சி.பிக்கு அதிகாரம் உள்ளது.

தன்னுடைய தடையின் காரணமாக தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன். மேலும் தனது ஒரே வருமான ஆதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தன்னை உள்நாட்டு தொடர்களில் பங்கேற்க பிசிபி மற்றும் ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு அனுமதிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details