தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பகலிரவு டெஸ்ட்: பிளாக்கில் டிக்கெட் விற்ற 10 பேர் கைது! - கொல்கத்த காவல் துறை கைது செய்துள்ளது

வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் தொடரான இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டியில் டிக்கெட்டுகளை மறைமுகமாக விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

D/N Test: 10 held for black marketing of tickets

By

Published : Nov 25, 2019, 1:20 PM IST

இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையிலான வரலாற்று சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த போட்டியின் மூன்றாம் நாளான நேற்று, கொல்கத்தா மைதானத்திற்கு வெளியில், மறைமுகமாக டிக்கெட் விற்றதாக 10 பேரை அம்மாநில காவல் துறை கைது செய்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 104 டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் கடந்த புதன் கிழமை ஈடன் கார்டன் மைதானதிற்கு அருகில் மறைமுக டிக்கெட்டுகளை விற்ற 30 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 216 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டேவிஸ் கோப்பை: ஆறாவது முறையாக ஸ்பெயின் அணி சாம்பியன்!

ABOUT THE AUTHOR

...view details