கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர், தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்சமயம் ஒரு சில கால்பந்து தொடர்கள் மட்டும் பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகின்றன.
இதனால் ஐபிஎல் தொடரையும் பார்வையாளர்களின்றி நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ், டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரை நடத்தினால் வீரர்களுக்கு சாதகமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கம்மின்ஸ் கூறுகையில், "எனது அணி நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டபோது, இந்தாண்டிலேயே ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும், ஐபிஎல் தொடரில் விளையாட நான் மிகவும் ஆர்வமாக இருப்பதால், அத்தொடர் விரைவில் நடைபெற வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.