ஐபிஎல் டி20 தொடர் இந்தியாவில் டி20 கிரிக்கெட் திருவிழாவாக பார்க்கப்படுகிறது. பிசிசிஐ வெளியிட்ட அட்டவணைப்படி இதன் 13ஆவது சீசனின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்க வேண்டியது. தொடரின் முதல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதவிருந்தன.
இதனால், வழக்கத்தை விட இம்முறை ஐபிஎல் தொடருக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்னர். அதற்கு முக்கிய காரணமே தல தோனியின் கம்பேக்தான். கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடருக்குப் பின் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த அவர், ஐபிஎல் தொடரில் ரீஎன்ட்ரி தரவிருந்தார்.
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னையில் மார்ச் மாத தொடக்கத்தில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டார். இதனிடையே, ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டத்திறனை வைத்து அவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.