தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கோவிட்-19: மருத்துவமனைக்கு நிதியுதவி அளித்த கம்பீர்! - கோவிட்-19 பெருந்தொற்று

இந்திய அணியின் முன்னாள் வீரரும், டெல்லி கிழக்கு தொகுதி எம்பியுமான கவுதம் கம்பீர், கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க, தனது நாடாளுமன்ற உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்திலிருந்து ரூ.50 லட்சத்தை வழங்கியுள்ளார்.

COVID-19: Gambhir offers Rs 50 lakh to Delhi government hospitals
COVID-19: Gambhir offers Rs 50 lakh to Delhi government hospitals

By

Published : Mar 24, 2020, 8:36 AM IST

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 16ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் பல பகுதிகளில் இப்பெருந்தொற்று காரணமாக 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளன.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க வீரரும், டெல்லியின் கிழக்கு தொகுதி நாடளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர், கோவிட் பெருந்தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சத்தை டெல்லி அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, கம்பீர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தக் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நமது நகரத்தையும், நகர மக்களையும் காப்பாற்றும் முயற்சியாக, அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக எனது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் வழங்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'தனிமைப்படுத்தப்பட்டுள்ளது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது' - செரீனா வில்லியம்ஸ்

ABOUT THE AUTHOR

...view details