சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் -19 வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை ஏழு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக மக்களிடையை பெரும் பீதியை கிளப்பியுள்ள இந்த கோவிட் -19 வைரஸால் சீனா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது.
அதேசமயம், இந்த கோவிட் -19 வைரஸால் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த தொடர் திட்டமிட்டப்படி நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இது குறித்து ஐசிசி கூறுகையில், "கோவிட் -19 வைரஸ் தொற்றால் தற்போதைய சூழ்நிலையை டி20 உலகக்கோப்பை தொடரை நிர்வாகக் குழு தீவிரமாக கண்காணித்துவருகிறது. அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் நவம்பர் 15ஆம் தேதி முடிவு பெறுகிறது.