இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதத்தில் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதையடுத்து, அனைத்து வகையிலான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
மார்ச் மாதம் முதல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இதுவரை எந்தவொரு கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. இதனிடையே இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே பர்வையாளர்களின்றி கிரிக்கெட் போட்டிகள் நடக்கவுள்ளது.
இதனால் டி20 உலகக்கோப்பத் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த விவகாரத்தில் கரோனா வைரசின் தாக்கத்தை கண்காணித்து முடிவு எடுக்கப்படும் என ஐசிசி அறிவித்தது.