2019ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாள்களே உள்ளன. இந்தியர்களுக்கு மிகவும் நெருக்கமான விளையாட்டு கிரிக்கெட் என்பதால், இந்த வருடத்தில் இந்திய கிரிக்கெட்டில் நடந்த தங்களுக்குப் பிடித்த தருணங்கள் குறித்து ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
அதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் தனக்கு மிகவும் பிடித்த தருணங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். அதில், "இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வருடமாக அமைந்தது. ஆஸ்திரேலியா அணியை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்துவது எனது கனவாக இருந்தது. அதனை இந்த ஆண்டின் தொடக்கத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சாதித்தது. அதுதான் இந்த ஆண்டில் மிகவும் பிடித்தமான தருணம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.