இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடிவருகிறது.
இப்போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் கேப்டன் ஜோ ரூட் 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
நேற்றையப் போட்டிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய வீரர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கு ஓய்வு என்பது கட்டாயம் தேவை எனத் தெரிவித்துள்ளார்.