தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மூன்றாவது டி20: டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு! - கிர்னால் பாண்டியாவிற்கு பதிலாக மனீஷ் பாண்டே அணியில் இடம்பிடித்துள்ளா

நாக்பூர்: இந்திய - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்து, விளையாடி வருகிறது.

Ind vs Ban match

By

Published : Nov 10, 2019, 6:58 PM IST


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, தற்போது மூன்று போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணியும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் இவ்விரு அணிகளும் தொடரை வெல்வதற்குறிய இறுதிப்போட்டியான மூன்றாவது டி20 போட்டியானது மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று தொடங்கியது. இந்த மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்தப் போட்டியைப் பொறுத்த வரையில், இந்திய அணியில் கிர்னால் பாண்டியாவிற்குப் பதிலாக மனீஷ் பாண்டே அணியில் இடம் பிடித்துள்ளார். வங்க தேச அணியில் மொசாடெக் ஹொசைனுக்குப் பதிலாக மித்துன் இடம் பெற்றுள்ளார்.

இந்திய வீரர்கள் விரவம்: ரோஹித் சர்மா (கே), ரிஷாப் பந்த், ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, தீபக் சாஹர், கலீல் அகமது, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் தூபே.

வங்கதேச வீரர்கள் விரவம்: மஹ்முதுல்லா (கே), முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், முகமது நைம், அஃபிஃப் ஹொசைன், அமினுல் இஸ்லாம், முகமது மித்துன், முஸ்தாபிஸூர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம், அமின் ஹொசைன்.

இதையும் படிங்க: 400ஆவது சிக்சர் அடித்து சாதனைப் படைப்பாரா ஹிட்மேன்!

ABOUT THE AUTHOR

...view details