தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மகளிர் டி20 உலகக்கோப்பையை பிரபலப்படுத்த புதிய முயற்சி - Aussie all-rounder Ellyse Perry

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை விளம்பரப்படுத்தும்விதமாக வரையப்பட்ட சுவர் ஓவியங்களை ஆஸ்திரேலிய  நட்சத்திர ஆல்-ரவுண்டரான எல்லிஸ் பெர்ரி அறிமுகம் செய்துவைத்தார்.

Ellyse Perry
Ellyse Perry

By

Published : Feb 6, 2020, 11:17 PM IST

ஆஸ்திரேலியாவில் இம்மாதம் 21ஆம் தேதி மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டிகள் தொடங்குகின்றன. மொத்தம் பத்து அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. இதனிடையே இந்த உலகக்கோப்பை தொடரை பிரபலப்படுத்தும்விதமாக ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி, பாப் பாடகி கேட்டி பெர்ரி ஆகியோரின் உருவங்களை, மெல்போர்னில் உள்ள ஐகானிக் ஹோசியர் லேனில் உள்ள சுவர்களில் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இதனை டெய்லா ப்ரோக்மேன் என்ற ஓவியக் கலைஞர் வரைந்துள்ளார். இதனிடையே இந்த ஓவியங்களை எல்லிஸ் பெர்ரி இன்று அறிமுகம் செய்துவைத்தார்.

தனது சுவர் ஓவியத்தின் முன்பாக கிரிக்கெட் விளையாடும் எல்லிஸ் பெர்ரி

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக உள்ள எல்லிஸ் பெர்ரி, கடந்தாண்டின் ஐசிசி சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை தட்டிச் சென்றார். இவர் இதுவரை டெஸ்ட், ஒருநாள், டி20 என 231 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 4500க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் எல்லிஸ் பெர்ரி முக்கியத்துவம் வாய்ந்த வீராங்கனையாக பார்க்கப்படுகிறார்.

மேலும் இந்த உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் பிரபல அமெரிக்க நட்சத்திர பாடகியான கேட்டி பெர்ரியின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் மூலம் அதிக ரசிகர்களை இந்தப் போட்டிக்கு வரவழைக்க முடியும்.

சுவர் ஓவியத்தை நிறைவு செய்யும் எல்லிஸ் பெர்ரி

முன்னதாக கடந்த 1999ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பாசடென்னாவில் நடைபெற்ற ஃபிபா மகளிர் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை 90 ஆயிரத்து 185 ரசிகர்கள் பார்த்தனர். இதுவே, மகளிர் விளையாட்டு போட்டியை அதிக பார்வையாளர்கள் கண்ட போட்டியாக அமைந்தது. எனவே மகளிர் தினத்தன்று நடைபெறும் இந்த மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் அமர முடியும் என்பதால் இப்போட்டியில் உலக சாதனையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் தொடரிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்!

ABOUT THE AUTHOR

...view details