இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து, விளையாடிவருகிறது.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் கே.எல். ராகுல் சேர்க்கப்படாமல், சுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது ட்விட்டர் பதிவில், "கே.எல். ராகுலை ஏன் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்குத் தேர்வுசெய்யவில்லை?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.