இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது பகலிரவு ஆட்டமாக கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கியது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது பகலிரவு ஆட்டமாக கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கியது.
ஆஸ்திரேலிய முதல் இன்னிங்ஸ்:
அதன்பின் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது முதல் ஓவரிலேயே ஸ்டீவ் ஸ்மித்தை வழியனுப்பிவைத்தார். அதன்பின் கிரீன், டிராவிஸ் ஹெட் ஆகியோரையும் அடுத்தடுத்து வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணியை நிலைகுலையச் செய்தார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டிம் பெய்ன் 73 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மீண்டும் தடுமாற்றத்தில் இந்தியா
இதைத்தொடர்ந்து நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு மீண்டும் பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால் இணை தொடக்கம் தந்தது. இந்த இன்னிங்ஸிலும் பிரித்வி ஷா, கம்மின்ஸ் வீசிய பந்தில் கிளீன் போல்டாகி ஏமாற்றினார். இதையடுத்து மயாங்க் அகர்வாலுடன், நைட் வாட்மேனாக ஜஸ்பிரித் பும்ரா களமிறங்கினார்.
இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 62 ரன்கள் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் மயாங்க் அகர்வால் 5 ரன்களுடனும், ஜஸ்பிரித் பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.