கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக உலகின் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தற்போது ஒரு சில நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் குறைந்துள்ள காரணத்தால் மீண்டும் விளையாட்டுப் போட்டிகளை பார்வையாளர்களின்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை மாதம் எட்டாம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் டேரன் பிராவோ, ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோர் விலகுவதாக அறிவித்தனர்.