தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் குறித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரிய ஸ்டெய்ன்! - டேல் ஸ்டெய்ன்

ஐபிஎல் குறித்து நான் கூறிய கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

A day after saying cricket gets forgotten in IPL, Steyn apologises
A day after saying cricket gets forgotten in IPL, Steyn apologises

By

Published : Mar 4, 2021, 3:35 AM IST

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன். இவர் இந்தியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், லங்கா பிரீமியர் லீக் போன்ற பிரபல டி-20 தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய ஸ்டெய்ன், நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கேற்றார் போல் ஆர்.சி.பி. அணியும் ஸ்டெய்னை தங்களது அணியிலிருந்து விலக்கியது.

அண்மையில்இது தொடர்பாக டேல் ஸ்டெய்ன் அளித்த பேட்டி ஒன்றில், “பாகிஸ்தான் சூப்பர் லீக், இலங்கை பிரிமியர் லீக் டி20 தொடர்கள் கிரிக்கெட்டுக்குப் பயனளிக்கும். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் எப்போதும் பணத்தைப் பற்றிதான் பேச்சு இருக்கும். அதில் கிரிக்கெட்டை நாம் மறந்துவிடுவோம்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

ஸ்டெய்னின் இந்த கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை கிளப்பியது.

இதனையடுத்து, தனது கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால், என்னை மன்னிக்க வேண்டுமென ஸ்டெய்ன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ள அவர்,“என் கிரிக்கெட் வாழ்க்கையில் ஐபிஎல் என்னுள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற வீரர்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய கருத்துக்கள்லீக் போட்டிகளைதரம் தாழ்த்திக் கூறுவதற்காகவோ, ரசிகர்களின் மனதை புண்படுத்துவதற்காகவோ, ஒப்பிடுவதற்காகவோ சொல்லப்பட்டதல்ல. இருப்பினும் என் கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சாலையோரக் கடையில் உணவு உண்ட பாண்டியா: வைரல் காணொலி

ABOUT THE AUTHOR

...view details