இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இந்தப் போட்டியை மையப்படுத்தி டெல்லியைச் சேர்ந்த இளைஞர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து டெல்லி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல் அவர்கள் சூதாட்டத்திற்காக பயன்படுத்திய 70 செல்ஃபோன்கள், இரண்டு டிவிகள், ஏழு லேப்டாப்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சூதாட்டத்தில் ரூ. 2 கோடி வரை நடந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.