உலகக்கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இதையடுத்து, பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உட்பட பல தலைவர்களும், நட்சத்திரங்களும் பி.வி சிந்துவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான சாமுண்டேஸ்வரநாத் சாம்பியன் பட்டம் வென்ற சிந்துவுக்கு விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ(bmw) காரை பரிசளித்துள்ளார். இந்த காரை வழங்கும்போது சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் உடனிருந்தார். இந்நிகழ்வில் நடிகர் நாகார்ஜூனாவும் கலந்துகொண்டார்.
தெலங்கானா பேட்மிண்டன் சங்கத்தின் துணைத் தலைவரான சாமுண்டேஸ்வரநாத், தன்னுடைய நண்பர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து நிதி சேகரித்து, வளர்ந்துவரும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு கார்களை பரிசாக வழங்குகிறார்.