தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சீன ஓபன் பேட்மிண்டன் - முதல் சுற்றோடு வெளியேறிய பி.வி. சிந்து - PV Sindhu

ஃபுஷோ: சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்யைர் பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வியுற்றதால் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

PV Sindhu

By

Published : Nov 5, 2019, 12:58 PM IST

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் சீனாவின் ஃபுஷோ நகரில் தொடங்கியுள்ளது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தாய்பெய் வீராங்கனை பாய் பூ போவை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் முதல் செட்டை 13-21 என்ற கணக்கில் இழந்த சிந்து, இரண்டாவது செட்டை 21-18 எனக் கைப்பற்றினார். இருப்பினும் தாய்பெய் வீராங்கனை 21-19 என்ற கணக்கில் கடைசி செட்டைக் கைப்பற்றியதால் சிந்து தோல்வியுற்றார்.

இதனால் இந்தத் தொடரின் முதல் சுற்றோடு வெளியேறும் நிலைக்குத் அவர் தள்ளப்பட்டார். முன்னதாக சீனா, கொரியா, டென்மார்க் ஆகிய தொடர்களிலும் சிந்து விரைவாகவே வெளியேறினார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற பிரஞ்சு ஓபன் தொடரில் காலிறுதி வரை அவர் முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சீன ஓப்பனின் கலப்பு இரட்டையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - அஸ்வினி பொன்னப்பா இணை கனடா இணையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

ABOUT THE AUTHOR

...view details