#DenmarkOpen2019: டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், ஜப்பானின் சாயகா தகாஹஷியை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை 15-21 என்ற கணக்கில் பறிகொடுத்த சாய்னா நேவால், இரண்டாம் செட்டையும் 21-23 என்ற கணக்கில் தகாஹசியிடம் போராடி வீழ்ந்தார்.