இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து தலைசிறந்த வீராங்கனைகளில் ஒருவராக வலம்வருகிறார். சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் அவர் ஜப்பானின் நஸோமி ஒகுஹராவை 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். இந்திய பேட்மிண்டன் துறைக்கு இத்தகைய பெருமையை தேடித் தந்த சிந்துவை கெளரவிக்கும் விதமாக, கேரள ஒலிம்பிக் சம்மேளனம் அவருக்கு இன்று பாராட்டு விழாவை நடத்தியது.
இதில் பங்கேற்ற சிந்துவிற்கு கேரள ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் சுனில், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிந்து,