தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கொரியா மாஸ்டர்ஸ்: இரண்டாம் சுற்றில் வெளியேறினார் ஸ்ரீகாந்த்! - இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றார்

க்வாங்ஜு:  கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இரண்டாம் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 14- 21, 19-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் காண்டா சுனேயாமாவிடம் தோல்வியடைந்தார்.

Kidambi Srikanth Knocked Out

By

Published : Nov 21, 2019, 2:59 PM IST

கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தென் கொரியாவின் க்வாங்ஜு நகரில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் உலகின் ஆறாம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் காண்டா சுனேயாமாவை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை காண்டா 21-14 என்ற கணக்கில் கைப்பற்றி ஸ்ரீகாந்திற்கு அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய காண்டா இரண்டாவது செட்டையும் 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதன் மூலம் ஜப்பானின் காண்டா சுனேயாமா 21-14, 21-19 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க: NZ vs ENG 2019: ஸ்டோக்ஸ் அதிரடியால் தப்பித்த இங்கிலாந்து!

ABOUT THE AUTHOR

...view details