தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நடிகர் சூர்யா குடும்பத்து திரைப்படங்களை திரையிட விருப்பமில்லை' - திரையரங்கு உரிமையாளர்கள்

சென்னை: தங்களுக்கு சொந்தமான திரையரங்குகளில் நடிகர் சூர்யா குடும்பத்தினரின் திரைப்படங்களை வெளியிட விருப்பமில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா

By

Published : Dec 28, 2020, 9:29 PM IST

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (டிச.28) நடைபெற்றது. அதில் பேசிய அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், ”தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சங்கத்தின் சார்பில் எட்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். விரைவில் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம்.

கோரிக்கைகள்

திரையரங்குகளில் 100 விழுக்காடு மக்களை அனுமதிக்க வேண்டும். தற்போது உள்ள சூழலில் ஜிஎஸ்டி வரியுடன் 8 விழுக்காடு உள்ளாட்சி வரியும் சேர்வதால், திரையரங்குகளை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. திரையரங்கு புதுப்பித்தல் உரிமையை ஓராண்டில் இருந்து மூன்று ஆண்டுகளாக மாற்றித்தர வேண்டும்.

மாஸ்டரும், ஈஸ்வரனும்!

ஆந்திரா போன்ற மாநிலங்களில் கரோனாவால் மூடப்பட்டிருந்த திரையரங்குகளுங்கு பல்வேறு சலுகைகள் அரசு அறிவித்தது போல், தமிழ்நாடு அரசும் சலுகைகள் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன. பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் கட்டாயம் திரையரங்குகளில் வெளிவரும். சிம்புவின் ஈஸ்வரன் படமும் திரையரங்குகளில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றார்.

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம்

ஓடிடி தளம்

ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, ”ஓடிடியில் வெளிவரும் படங்களின் வெற்றி என்பது சம்பந்தப்பட்ட ஓடிடி தளத்தின் உரிமையாளருக்கு மட்டுமே தெரியும். திரையரங்குகளை ஒழித்துவிட்டு ஓடிடி தளம் மூலமாக ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் அதனை புரிந்துகொள்ளவில்லை” என்றார்.

திரையரங்குகளின் மாயாஜாலம்

”திரையரங்கு மட்டுமே நிரந்தரம். ரஜினி முதல் அனைத்து பெரிய நடிகருமே இங்கிருந்தான் வந்தார்கள். நடிகர் சூர்யாவின் குடும்பம் திரையரங்கம் ஒழிய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார்கள். நடிகர் சூர்யாவும் அவரது குடும்பத்தினரும் தங்களது திரைப்படங்களை ஓடிடியிலேயே ரிலீஸ் செய்துகொள்ளட்டும். அவர்களது படங்களை திரையரங்குகளில் வெளியிட நாங்கள் விரும்பவில்லை” என ரோகிணி பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதையும் படிங்க:விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ் தேதி உறுதி!

ABOUT THE AUTHOR

...view details