தமிழ் சினிமாவை போன்றே தெலுங்கிலும் கிராமக் கதைகளை மையப்படுத்தி நிறைய தொடர்கள் வர ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் தெலுங்கில் மக்களின் மனதைக் கவர்ந்துவரும் தொடர் 'முட்யாலா முக்கு'. இந்தத் தொலைக்காட்சித் தொடரில் நடித்துவரும் நடிகை பார்கவி குடும்பப் பெண்கள் கொண்டாடும் நடிகையாக இருந்துள்ளார்.
இந்நிலையில் திங்கள்கிழமை தொடருக்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் பார்கவி (20), அனுஷா ரெட்டி (21) ஆகியோர் ஹைதராபாத் நோக்கி காரில் பயணம் செய்தனர்.
இவர்களுடன் கார் ஓட்டுநர் சக்ரி, வினய் குமார் ஆகியோரும் வந்தனர். நான்கு பேரும் ஒரே காரில் பயணித்த நிலையில் விகாராபாத் மாவட்டத்தை அடைந்தனர். அப்போது குடா என்னும் இடத்தில் கார் ஓட்டுநர்ர் சக்ரி முன்னால் சென்ற டிரக்கை முந்திச்செல்ல முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது வேகமாக மோதியுள்ளார்.