கரோனா வைரஸ் பாதிப்பால் 72 நாள்களாக தொலைக்காட்சித் தொடர்கள், சினிமா படப்பிடிப்பு என எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில், அரசு சில நிபந்தனை தளர்வுகளுடன் மெகா தொடர்களின் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது.
இதனை அடுத்து 72 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த 10ஆம் தேதி முதல் தொடங்கின. படப்பிடிப்பு தளத்தில் நடிகர், நடிகை, ஊழியர்களுக்கு கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களோடு முழு பரிசோதனைக்குப்பின் கடந்த 10ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சென்னையில் தொடர்ச்சியாக கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையில் 12 நாள்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சின்னத்திரை படப்பிடிப்புகள் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் 19ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடைபெறாது என்று சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சுஜாதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'சென்னையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தமிழ்நாடு அரசு இவ்வளவு கடுமையாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த இருப்பதால், இதை நாங்களும் பின்பற்றப் உள்ளோம்.