பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'ஈரமான ரோஜாவே' தொடர் 2018ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது. இதில் ஷியாம், சாய் காயத்ரி, பவித்ரா உள்ளிட்டோர் நடித்துவந்தனர். சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பான இந்தத் தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இதனை இதில் நடித்திருந்த சாய் காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார். அதில், "அனைத்தும் முடிந்தது இன்று. ஈரமான ரோஜாவின் கடைசி நாள் படப்பிடிப்பு. லவ் யூ ஆல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.