தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 7, 2020, 8:06 AM IST

ETV Bharat / sitara

மும்பையில் போஜ்புரி நடிகை தற்கொலை!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் போஜ்புரி நடிகை அனுபமா படக் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Bhojpuri actor Anupama Pathak Anupama Pathak suicide Mumbai போஜ்புரி நடிகை தற்கொலை மும்பையில் நடிகை தற்கொலை அனுபமா படக்
Bhojpuri actor Anupama Pathak Anupama Pathak suicide Mumbai போஜ்புரி நடிகை தற்கொலை மும்பையில் நடிகை தற்கொலை அனுபமா படக்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள தகிஷர் குடியிருப்பு பகுதியில் போஜ்புரி நடிகை அனுபமா படக் வசித்துவந்தார்.

40 வயதான இவர் கடந்த 2ஆம் தேதி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்னதாக ஆக.1ஆம் தேதி அவர் பேஸ்புக்கில் நேரலையில் (லைவ்) பேசியுள்ளார்.

அப்போது, “தம்மை சிலர் ஏமாற்றி விட்டதாகவும், இதனால் தான் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன்” என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “உங்களது நண்பர் யாராக இருந்தாலும் அவர்களுடன் உங்களது பிரச்னைகளை பகிர வேண்டாம். யாரையும் உங்களது நண்பராக கருத வேண்டாம். ஒருவரையும் நம்பவும் வேண்டாம். நான் எனது வாழ்க்கையிலிருந்து பாடம் படித்துவிட்டேன். மக்கள் மிக மிக சுயநலவாதிகள். அவர்களுக்கு யார் மீதும் அக்கறை இல்லை” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் போஜ்புரி தொலைக்காட்சி நடிகை அனுபமா படக் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சின்னத்திரை நடிகை அனுபமா படக், தனியார் நிறுவனமொன்றில் முதலீடு செய்து ஏமாந்தது” தெரியவந்தது.

இதையும் படிங்க:'சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார்'- பாஜக தலைவர் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details