தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிரபல தொடரிலிருந்து விலகிய தர்ஷா குப்தா

சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் 'செந்தூரப் பூவே' தொடரிலிருந்து நடிகை தர்ஷா குப்தா விலகியுள்ளார்.

By

Published : Aug 6, 2021, 9:23 PM IST

Dharsha
Dharsha

சமூக வலைதளத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டு வெள்ளித்திரை நடிகைகளுக்கே சவால் விட்டு வந்தவர், தர்ஷா குப்தா.

இவர் பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது வழக்கமாக இருந்தது. இதனால் இவரை பின்தொடர்வேரின் எண்ணிக்கை அதிகரித்தது.

நடிகை தர்ஷா குப்தா

இதற்கிடையில் 'குக் வித் கோமாளி சீசன் 2' நிகழ்ச்சியில் தர்ஷா குப்தா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து இவர் தற்போது 'செந்தூரப் பூவே' என்னும் தமிழ்த்தொடரில் நடித்து வருகிறார்.

நடிகை தர்ஷா குப்தா

இந்தத் தொடரில் தர்ஷா குப்தா வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் அழகான ராட்சசியாக நிலைகொண்டார்.

தற்போது இந்தத் தொடரில் இருந்து தர்ஷா குப்தா விலகியுள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன.

நடிகை தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா இந்தத் தொடரில் இருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமான காரணம் தெரியவில்லை.

இதையும் படிங்க: 'அந்த மாடர்ன் பொண்ணுக்கு, அப்படி ஒரு பரந்த மனசு' - உதவிக்கரம் நீட்டும் பர்த்டே பேபி தர்ஷுமா

ABOUT THE AUTHOR

...view details