கடந்த ஜூன் 14ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ அலுவலர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி, எனது சகோதரனுக்காக 1000 மரங்களை நடுவதே எனது குறிக்கோள் என்றும், அவன் நினைவாக நான் இதை செய்கிறேன் என்றும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு Plants4SSR என்றும் பெயரிட்டு, ரசிகர்களையும் மரக்கன்றுகள் நட வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.