தமிழ்நாடு

tamil nadu

தொகுப்பாளினி அர்ச்சனா மூளையில் அறுவை சிகிச்சை - சோகத்தில் ரசிகர்கள்

தொகுப்பாளினி அர்ச்சனா தனக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

By

Published : Jul 10, 2021, 3:19 PM IST

Published : Jul 10, 2021, 3:19 PM IST

Updated : Aug 27, 2021, 7:40 PM IST

VJ Archana
VJ Archana

தொலைக்காட்சி தொகுப்பாளினியான அர்ச்சனா, கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதிலும் அவர் அந்நிகழ்ச்சியில், ’அன்பு தான் ஜெயிக்கும்' எனப் பேசிய வசனம் இன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இந்நிலையில் அர்ச்சனா திடீரென மூளையில் அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அர்ச்சனா வெளியிட்ட பதிவு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஹலோ என் அன்பான இன்ஸ்டா குடும்பமே. நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். நான் எப்போதும் என் இதயத்திலிருந்து செயல்பட கூடிய நபர். அதனால் என் மூளை வருத்தமடைந்தது விட்டது போல.

ஆம்... என் மூளையில் அருகே சிறிய பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது. எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் அது தெரியவந்தது. இதனையொட்டி எனக்கு நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. எனது உடல் நிலை குறித்து எனது மகள் ஜாரா உங்களிடம் தகவல் தெரிவிப்பார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'சாமி'க்கு வில்லனாக அவதரித்த 'பெருமாள் பிச்சை': ஹேப்பி பர்த்டே கோட்டா சீனிவாச ராவ்!

Last Updated : Aug 27, 2021, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details