தமிழ்நாடு

tamil nadu

1 மில்லியன் ஃபாலோயர்களுக்கு நன்றி தெரிவித்து மக்கள் செல்வன்!

By

Published : Jul 12, 2020, 10:28 PM IST

தனது ட்விட்டர் பக்கத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்கள் குவிந்ததற்கு விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், குணசித்திரம் என்று எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. ரசிகர்களால் அன்போடு மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

மற்ற நடிகர்கள் போல் இல்லாமல் தனது ரசிகர்கள் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டால், அவர்களை கட்டி அணைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பார். அதனால்தான் விஜய் சேதுபதி ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

இதுதவிர அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து தனது கருத்துக்களையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் குவிந்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்து விஜய் சேதுபதி தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'ஓ' என்ற ஒற்றை வார்த்தையை மிகவும் கம்பீரமாக கையில் பிடித்தவாறு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ABOUT THE AUTHOR

...view details